அமெரிக்காவின் ஹிட்லரும் ஆளும் வர்க்கத்தின் ஒழுக்கநெறியும்
கடந்த புதன்கிழமை இரவு டொனால்ட் ட்ரம்ப் ஆற்றிய உரையில் இருந்து பெறப்பட வேண்டிய தவிர்க்க முடியாத முடிவு என்னவென்றால், அமெரிக்க ஜனாதிபதி ஒரு அரசியல் குற்றவாளி என்பதாகும்.
கடந்த புதன்கிழமை இரவு டொனால்ட் ட்ரம்ப் ஆற்றிய உரையில் இருந்து பெறப்பட வேண்டிய தவிர்க்க முடியாத முடிவு என்னவென்றால், அமெரிக்க ஜனாதிபதி ஒரு அரசியல் குற்றவாளி என்பதாகும்.
ஜேர்மனியின் நூரம்பேர்க்கில் உள்ள பிரெட்ரிக்-அலெக்சாண்டர் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய ஒரு சக்திவாய்ந்த விரிவுரையில், ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் என்பது, நூரம்பேர்க் விசாரணைகளில் நிறுவப்பட்ட சட்டத் தர நிலைகளின்படி அமைதிக்கு எதிரான ஒரு குற்றம் என்பதை டேவிட் நோர்த் நிரூபித்துக் காட்டினார்.
வேலைவாய்ப்புகள், ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களை எதிர்த்துப் போராடும் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு எதிரான பொலிஸ் அடக்குமுறை பெருகி வருகிறது.
முன்னிலை சோசலிசக் கட்சியானது, தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வதேசப் போர் எதிர்ப்பு இயக்கத்திற்கு அன்றி, “உலக மக்கள் சக்தி” என்ற போர்வையில் சந்தர்ப்பவாதக் குழுக்களின் ஒரு சர்வதேசக் கூட்டணிக்கே அழைப்பு விடுக்கிறது.
கடந்த புதன்கிழமை அன்று தொலைக்காட்சியில் ஆற்றிய முதன்மை நேர உரையில், ஈரான் போரில் அமெரிக்காவின் இலக்கு ஈரானிய சமூகத்தை அழிப்பதே என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தப் போர், ஈரானில் 80 ஆண்டுகளுக்கும் மேலான அமெரிக்க ஏகாதிபத்தியத் தலையீட்டின் உச்சக்கட்டமாகும்; அந்த வரலாற்றைத் தவிர்த்து இந்தப் போரைப் புரிந்துகொள்ள இயலாது.
நெர்தீன் கிஸ்வானியைக் கொலை செய்யத் தீட்டப்பட்ட சதி என்பது ஒரு தனிப்பட்ட செயலல்ல. மாறாக, இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பு குற்றமாக்கப்பட்டு, ஜனநாயக உரிமைகள் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் ஒரு அரசியல் சூழலின் விளைவாகும்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் 30வது நாளான திங்களன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது கோரிக்கைகளுக்கு ஈரான் அடிபணியவில்லை என்றால், அந்த நாட்டின் அனைத்து எரிசக்தி உற்பத்தி நிலையங்களையும் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்களையும் அழித்துவிடுவேன் என்று அச்சுறுத்தியுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்கப் போரின் குற்றவியல் தன்மை குறித்து, நூரம்பேர்க் நீதி அரண்மனைக்கு வெளியே சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் ஆற்றிய உரையின் காணொளி, சமூக ஊடகத் தளங்களில் சுமார் 2,00,000 முறை பார்க்கப்பட்டுள்ளது; மேலும் இது மக்களிடையே ஒரு மிகப்பெரிய ஆதரவு அலையை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 28 அன்று நடைபெற்ற மூன்றாவது சுற்று "மன்னர்கள் வேண்டாம்" போராட்டங்களில், அமெரிக்கா முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கினர். இது, அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே நாளில் இடம்பெற்ற மிகப்பெரிய போராட்டமாகும்.
போர், பாசிசம் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்களுக்கு எதிரான எதிர்ப்பின் பரந்த தன்மையை எடுத்துக்காட்டும் வகையில், முக்கிய நகரங்களிலும் கிராமப்புற சமூகங்களிலும் பெருந்திரளான மக்கள் கூடினர்.
ஈரானுக்கு எதிரான போர், அமெரிக்க மக்கள் மற்றும் ஒட்டுமொத்த உலக மக்களுக்கு எதிரான ஒரு குற்றவியல் சதியாகவே நடத்தப்படுகிறது.
உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியரும், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான டேவிட் நோர்த் உட்பட பல பேச்சாளர்கள் இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றினர். அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியாக இருந்த அமெரிக்க தொழிலாளர் கழகத்தின் (Workers League) தலைவராக இருந்த டேவிட் நோர்த், தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) தலைமையின் அரசியல் சீரழிவுக்கு எதிரான போராட்டத்தில் முதன்மையான பாத்திரத்தை வகித்திருந்தார்.
ட்ரம்ப் நிர்வாகம் ஆயிரக்கணக்கான தரைப் படையினர்களை பாரசீக வளைகுடா நோக்கி அனுப்பி வரும் நிலையில், அமெரிக்காவின் கோரிக்கைகளை ஈரான் ஏற்காவிட்டால், அந்நாட்டின் மீதான ஆக்கிரமிப்புப் போரை மிகப்பெரிய அளவில் தீவிரப்படுத்தப்போவதாக வெள்ளை மாளிகை புதன்கிழமை அன்று அச்சுறுத்தியுள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய போர் தொடங்கி ஒரு மாதமாகிவிட்ட நிலையில், அமெரிக்கா வேகமடைந்து வரும் வர்க்கப் போராட்டத்தின் வெடிப்பால் அதிர்ந்து போயுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான தனது அறிவிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமான போரில் அமெரிக்கா "வெற்றி" பெற்றுவிட்டதாக" அறிவித்ததுடன், ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறினார். ஆனால், ஈரானை இலக்கு வைத்து இடம்பெறும் இராணுவக் குவிப்பு மேலும் விரிவடைந்து வருவதையே அமெரிக்க ஊடக அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.
ஈரானுக்கு எதிரான சட்டவிரோத அமெரிக்க-இஸ்ரேல் போர் குறித்த அரசாங்கத்தின் போலியான “நடுநிலையை” திசாநாயகவின் கருத்துக்கள் மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளன.
பேச்சுவார்த்தைகள் என்ற போர்வையில், இராணுவத் தாக்குதல்களை நடத்திய ட்ரம்பின் கடந்தகால வரலாற்றைக் கருத்தில் கொள்ளும்போது, ஈரானுடனான "எமது பகைமையை முழுமையாகத் தீர்ப்பது" குறித்த "உரையாடல்கள்" பற்றிய அவரது கூற்று நம்பமுடியாதது மட்டுமல்ல, அது ஆபத்தான தீய நோக்கத்தையும் கொண்டிருக்கிறது.
சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில், சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கிபட்ட போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக, உலகத் தொழிலாளர் வர்க்கக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ள சர்வதேசப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக IYSSE இந்தக் கூட்டத்தை நடத்துகிறது.
அரசியல் ரீதியாகப் அடிபணிய வைக்க வேண்டும் என்பதற்காக, ஒட்டுமொத்த சாதாரண மக்கள் தொகையின் அடிப்படை வாழ்வாதார கட்டமைப்புகளை அழித்தொழிப்போம் என்று இவ்வளவு வெளிப்படையாக, மிரட்டலை விடுத்த வேறெந்த அரசாங்கமும் நவீன வரலாற்றில் இல்லை.
கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆக்ஸியோஸ் வெளியிட்ட செய்தியின்படி, ஈரானில் தரைப்படைகளை நிலைநிறுத்துவது குறித்து "தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக" வெள்ளை மாளிகையைச் சேர்ந்த மூன்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் கார்க் தீவை கைப்பற்றுவதே அவர்களின் மிகவும் சாத்தியமான திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
புதுதில்லியால் கண்டிக்கப்பட்ட ஒரே நாடு ஈரான் மட்டுமே. அதுவும் ஈரான் தன்னை தற்காத்துக் கொள்ளத் துணிந்ததற்காக கண்டிக்கப்பட்டது.
ஈரானுக்கு எதிரான போருக்கு நிதியளிப்பதற்காக ட்ரம்ப் நிர்வாகம் 200 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை கோருவதாக வாஷிங்டன் போஸ்ட் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமையன்று, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் அரசு மற்றும் அரசாங்கத்தின் தலைவர்கள், ஹோர்முஸ் நீரிணையைத் திறந்து வைக்கப் போவதாக உறுதியளித்து, ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் கூற்றுக்களுக்கு மாறாக, ஈரானுக்கு எதிரான அழித்தொழிப்புப் போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராஜதந்திர மற்றும் மூலோபாய நோக்கங்களுக்காக கொழும்பு ஒரு இணக்கமான இடைத்தரகராக செயல்படுகிறது.
புதிய போர் எதிர்ப்பு இயக்கமானது எல்லாவற்றிற்கும் மேலாக, சர்வதேச ரீதியானதாக இருக்க வேண்டும் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒன்றுபட்ட உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் சக்தியைத் அணிதிரட்ட வேண்டும்.
20 ஆம் நூற்றாண்டின் சமூக சாதனைகளைத் துடைத்தெறியும் ஏகாதிபத்தியத்தின் தாக்குதலை, ஒட்டுமொத்த அமெரிக்கக் கண்டங்களிலும் (வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கா) தொழிலாளர் வர்க்கம் சுயாதீனமாக அணிதிரள்வதன் மூலம் மட்டுமே நிறுத்த முடியும்.
1980களின் நடுப்பகுதியில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்து (ICFI) தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) வெளியேற்றப்பட்டதானது, சர்வதேச சோசலிச இயக்கத்தின் வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணமாக அமைந்தது. ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் போக்காக இருந்த ட்ரொட்ஸ்கிசத்தின், அதாவது புரட்சிகர மார்க்சிசத்தின் உயிர் வாழ்க்கைக்கே அது பெரும் சவாலாக இருந்தது.
31வது கடற்படை அதிரடிப்படையைச் சுமந்து செல்லும் நீர்நிலம் இரண்டிலும் தாக்குதல் நடத்தக்கூடிய ஹெலிகாப்டர் தாங்கி கப்பலான USS திரிப்போலி, பாரசீக வளைகுடாவை நோக்கிய பயணத்தில் மலாக்கா நீரிணையைக் கடப்பதை செவ்வாயன்று அவதானிக்க முடிந்தது.
ஐரோப்பிய வல்லரசுகள், தங்களால் கட்டுப்படுத்தவோ அல்லது அதன் முடிவில் செல்வாக்கு செலுத்தவோ முடியாத ஒரு போரில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை. அந்தப் போரில் தங்கள் பங்களிப்பிற்காக அவர்கள் ஒரு கடுமையான பேரம் பேசலை விரும்புகிறார்கள்.
அமெரிக்கத் தலைநகரின் மிக முக்கியமான கலைக்கூடத்தின் பின்னணியைப் பயன்படுத்திக் கொண்ட ட்ரம்ப், ஈரான் மீதான தனது இராணுவத் தாக்குதல் குறித்த ஒரு குழப்பமான விளக்கத்தை அளித்து, இரத்தத்தை உறைய வைக்கும் மிரட்டல்களையும், இந்தக் குற்றவியல் போரினால் ஏற்படும் பிரமாண்டமான உயிரிழப்புகள் குறித்த முழுமையான அலட்சியத்தையும் வெளிப்படுத்தினார்.
இலங்கை சோ.ச.க. மற்றும் IYSSE உறுப்பினர்கள் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போருக்கு எதிரான பிரச்சாரத்தில் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
வரலாறு நெடுகிலும், ஆழமான உள்நாட்டு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஆட்சிகள், அவற்றைத் தீர்ப்பதற்கு அல்லது திசைதிருப்புவதுக்கு போரையே ஒரு வழிமுறையாக நாடுகின்றன.
“இந்தப் போர் தீவிரமடைந்தால், மூன்றாம் உலகப் போரின் ஆபத்து அதிகரிக்கும். ஒரு பெரிய சக்தி மற்றொரு சிறிய நாட்டிற்கு எதிராகப் போரை நடத்துகிறது. அது நிறுத்தப்பட வேண்டும்,” என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கூறினார்.
டயஸ்-கனெல்லின் “கலந்துரையாடல்” பற்றிய பேச்சுக்கள், உண்மையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் ஹவானா சரணடைவதற்கான நிபந்தனைகள் குறித்தப் பேச்சுவார்த்தைகளையே சுட்டிக்காட்டுகின்றன.
ஈரான் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்படும் தரைவழித் தாக்குதல் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் முடிந்துவிடாது. அது நீண்டகாலம் நீடிக்கக்கூடிய மற்றும் கொடூரமான இரத்தக் களரியாகவே அமையும்.
சோசலிச சமத்துவக் கட்சி, அமெரிக்க ஏகாதிபத்தியமும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போரையும் நிராயுதபாணியான ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடித்ததையும் அப்பட்டமான போர்க்குற்றம் எனக் கண்டனம் செய்கிறது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் ஆறாவது நாளை எட்டிய போது, தெற்கு லெபனானில் இருந்து மக்களை வெளியேற உத்தரவிட்டுள்ள இஸ்ரேல், தரைவழி ஊடுருவலைத் தொடங்கி, முழு மத்திய கிழக்கையும் வேகமாக யுத்தத்துக்குள் மூழ்கடிக்கக் கூடியவாறு இரண்டாவது பெரிய களமுனையைத் திறந்துவிட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் இப்போது பதின்மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், உலகின் 20 சதவீத எண்ணெய் கடந்து செல்லும் ஹார்முஸ் நீரிணையை மையமாகக் கொண்டு, தொடர் விளைவுகளைக் கொண்ட ஒரு பிராந்திய நெருக்கடியைத் தூண்டியுள்ளது.
வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட ஒரு நாடு, ஏகாதிபத்திய வன்முறையின் மிகக் கொடூரமான வடிவங்களை எதிர்ப்பதற்கான உரிமையைக் கண்டித்து, 140 அரசாங்கங்கள் ஒரு தீர்மானத்திற்கு இணை ஆதரவு வழங்கியிருப்பது, உலக முதலாளித்துவமானது முன்னொரு காலத்தில் கட்டுப்பாடற்ற காலனித்துவ ஆதிக்கம் மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களுடன் தொடர்புடைய காட்டுமிராண்டித்தனத்தை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தனது பிரச்சார அறிவிப்பில், ஜூன் 15-18 தேதிகளில் நடைபெறவுள்ள ஐக்கிய வாகனத் தொழிலாளர் (UAW) அரசியலமைப்பு மாநாட்டிற்குப் பிரதிநிதிகளாகப் போட்டியிடுவதன் மூலம், தொழிலாளர்கள் தனது பிரச்சாரத்தை ஆதரிக்குமாறு லெஹ்மன் அழைப்பு விடுத்தார்.
கடந்த செவ்வாயன்று, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஹெலிகாப்டர் மூலம் அணு ஆயுதம் ஏந்திய சார்ல் டு கோல் விமானம் தாங்கி போர்க் கப்பலுக்கு வருகை தந்து, மத்திய கிழக்கில் ஒரு ஐரோப்பிய கடற்படைக் குழுவிற்கு பிரான்ஸ் தலைமை தாங்கும் என்று அறிவித்தார்.
ஈரான் மீதான குற்றவியல் குண்டுவீச்சுக்களையும் அனைத்து ஏகாதிபத்தியப் போர்களையும் முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஒரே சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே என்பதை அடையாளம் காட்டிய இந்த நிகழ்வில், உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் போருக்கான காரணங்கள், அதன் பூகோள தாக்கங்கள், இதில் உள்ள வரலாற்று மற்றும் கோட்பாட்டுச் சிக்கல்கள், மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, இதைத் தடுப்பதற்குத் தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாகத் தலையிட வேண்டியதன் அவசியம் குறித்தும் பேச்சாளர்கள் கலந்துரையாடுவார்கள்.
பென்டகன் மூன்றாவது விமானம் தாங்கி போர்க் கப்பலை மத்திய கிழக்குக்கு அனுப்புகிறது. இது 90 மில்லியன் (9 கோடி) மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டின் மீதான இடைவிடாத குண்டுவீச்சு தீவிரமடையும் என்பதற்கான அறிகுறியாகும்.
“ஈரான் நிபந்தனையின்றி சரணடையும் வரை வேறு எந்த உடன்படிக்கையும் கிடையாது” என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை அறிவித்தார். அமெரிக்காவின் போர் நோக்கங்களிலேயே இதுதான் மிகத் தீவிரமான வடிவமாகும். ஈரானிய சமூகம் அழிக்கப்படும் வரை ஒரு நிரந்தரப் போரைத் தொடரும் நோக்கத்தையே இது காட்டுகிறது.
இந்தப் போரின் விளைவு அமெரிக்காவிலேயே —டெட்ராய்ட், நியூ யோர்க், லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பிற முக்கிய தொழிலாள வர்க்க மையங்களில், வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியால் தீர்மானிக்கப்படும்.
தனது போர்க் கொள்கை குறித்த எந்தவொரு நாடாளுமன்ற விவாதமும் இன்றி, உலகைப் பொருளாதார மற்றும் இராணுவப் பேரழிவிற்கு உள்ளாக்க அச்சுறுத்தும் ஒரு போரில் மக்ரோன் ஒருதலைப்பட்சமாக பிரான்சை ஈடுபடுத்தியுள்ளார்.
இந்த இணையவழி கருத்தரங்கின் நோக்கம், போருக்கு எதிரான போராட்டத்தை அதன் அவசியமான வரலாற்று, அரசியல் மற்றும் சமூகப் பின்னணியில் வைப்பதாகும். வெள்ளை மாளிகை, பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் அனைத்து ஏகாதிபத்திய அரசாங்கங்களாலும் பரப்பப்படும் முடிவற்ற பொய்ப் பிரச்சாரங்கள் மற்றும் தவறான தகவல்களை இது முறியடிக்கும்.
மார்ச் 4, 2026 அன்று, இந்தியப் பெருங்கடலில் ஈரானிய போர்க் கப்பலான ஐரிஸ் டெனாவை (IRIS Dena) அமெரிக்கக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் குண்டு வீசித் தகர்த்தது ஒரு போர்க்குற்றமாகும்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்திய போரின் பின்னணி, அதைத் தூண்டும் சமூக சக்திகள் மற்றும் அந்தப் போரைத் தடுப்பதற்கான மூலோபாயம் ஆகியவற்றை விளக்குவதற்காக, உலக சோசலிச வலைத் தளம் இந்த ஞாயிறு, மார்ச் 8 அன்று மாலை 3:00 மணிக்கு (EDT நேரப்படி) ஓர் அவசர உலகளாவிய இணையவழி கூட்டத்தை நடத்துகிறது. இதில் கலந்துகொள்ளப் பதிவு செய்யுமாறு வாசகர்கள் அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
பிரெஞ்சு ஜனாதிபதி, ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்குமான ஒரு "மேம்பட்ட அணுவாயுதத்தை கொண்டு தடுக்கும்" அமைப்பை நிறுவவும், எதிர்காலத்தில் ஜேர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தவும் உத்தேசித்துள்ளார்.
அதிகப்படியான ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய சக்திகள் இந்த மோதலுக்குள் இழுக்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் குர்திஷ் தேசியவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் ஈரானுக்குள் ஓர் இனவாத உள்நாட்டுப் போரைத் தூண்டுவதற்கு வேலை செய்து வருகிறது.
பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள், தோட்டத்தின் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு தற்காலிக ஊழியர்களைப் போல உழைத்து அதிக அறுவடை செய்ய அழுத்தம் கொடுக்கின்றமை, தோட்டங்களில் இரக்கமற்ற சுரண்டலைத் தீவிரப்படுத்த ஒரு புதிய சுற்று தாக்குதலைத் தயாரித்து வருவதைக் குறிக்கிறது.
போர் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலானது, ஒரு முழுமையான அழிப்பு மற்றும் நிர்மூலமாக்கும் போரின் தன்மையை மென்மேலும் பகிரங்கமாக எடுத்துள்ளது.
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு தொடங்கியுள்ள சட்டவிரோதப் போரில் நேரடியாகப் பங்கேற்கும் ஐக்கிய இராச்சியத்தின் (UK) விமானங்களில், கத்தார் மற்றும் மத்திய தரைக்கடல் தீவான சைப்ரஸிலிருந்து (Cyprus) இயக்கப்படும் ரோயல் விமானப் படையின் (RAF) டைபூன் ரக போர் விமானங்களும் அடங்கும்.
பின்வரும் அறிக்கையானது, ஈரான் மீதான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், ஒரு சர்வதேச சோசலிச போர் எதிர்ப்பு இயக்கத்திற்காகவும், சோசலிச சமத்துவக் கட்சியின் (ஜேர்மனி) தலைவர் கிறிஸ்டோப் வான்ட்ரையர் அவர்களால் திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டது.
பென்டகன் இராணுவ விளக்கக் கூட்டத்தில் பயன்படுத்தப்பட்ட முன்னெப்போதும் இல்லாத மொழிகள், கடந்த சனிக்கிழமையன்று தான் தொடங்கிய ஆக்கிரமிப்புப் போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் தயாராகி வருவதைக் காட்டுகின்றன.
ஈரான், தனது அரசாங்கம் மற்றும் மக்களுக்கு எதிரான ஏகாதிபத்தியத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பதால், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் பிற இடங்களில் ஏவுகணை, ட்ரோன் மற்றும் செல் தாக்குதல்களும் ஏற்கனவே நடந்து வருகின்றன. ஹோட்டல்கள் மற்றும் விமான நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன.
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் திடீரென உயர்ந்தன.
ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தைத் ட்ரம்ப் கருப்புப் பட்டியலில் சேர்த்ததும், அதற்கு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடேய் அளித்த பதிலும், இந்தத் தகராறின் உண்மையான முகத்தை வெளிப்படுத்துகின்றன: இது அறநெறிக்கும் இராணுவவாதத்திற்கும் இடையிலான மோதல் அல்ல; மாறாக, அமெரிக்கப் போர் இயந்திரத்துடன் AI தொழில்நுட்பத்தை இணைப்பதற்கான நிபந்தனைகள் குறித்து, ஆளும் வர்க்கத்தின் இரண்டு பிரிவினரிடையே நிலவும் மோதலாகும்.
பிப்ரவரி 28 அதிகாலை வேளையில் தொடங்கிய ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல், அமெரிக்க அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறி நடத்தப்பட்ட ஒரு குற்றவியல் போர் நடவடிக்கையாகும்.
இந்தப் போரின் தொடக்கத்திலேயே நிலவும் மக்கள் எதிர்ப்பின் அளவு, நவீன அமெரிக்க வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராத ஒன்றாகும். சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட ராய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பின்படி, வெறும் 27 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே இந்தத் தாக்குதல்களுக்குத் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
துருக்கியின் அங்காராவில் அமைந்துள்ள பில்கென்ட் பல்கலைக்கழகம் மற்றும் மத்திய கிழக்கு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றிலுள்ள சமூக ஜனநாயகக் கழகங்களின் அழைப்பின் பேரில் டேவிட் நோர்த் இணைய வழியில் விரிவுரைகளை வழங்கினார். இந்த விரிவுரைகள் பிப்ரவரி 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்டன.
வாஷிங்டனும் டெல் அவிவ்வும், ஈரானால் ஆத்திரமூட்டப்படாமலேயே அதன் மீது குற்றவியல் போரைத் தொடங்கத் தயாராக இருக்கும் கட்டத்தில், இஸ்ரேலுடனான இந்தியாவின் "மூலோபாய பங்காண்மையை" மேலும் உயர்த்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் இஸ்ரேலுக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டார்.
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது போர் வெறிபிடித்த கும்பலால் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு பெரும் அரசியல் குற்றமாகும்; இது சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது மற்றும் அமெரிக்க அரசியலமைப்பை நேரடியாக மீறுவதாகும்.
இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் அணிகள் மற்றும் ஏராளமான போர் விமானங்களின் தலைமையில், மத்திய கிழக்கில் மிகப்பெரிய இராணுவ வலிமையைத் திரட்டியுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம், இன்னும் சில மணிநேரங்கள் அல்லது நாட்களில் ஈரானுக்கு எதிராக ஒரு குற்றவியல் போரைத் தொடுக்கத் தயாராக உள்ளது.
அமெரிக்காவில், கடந்த 150 ஆண்டுகளாக முதலாளித்துவ இருகட்சி முறை அமலில் உள்ள நிலையில், ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளையும் நலன்களையும் உண்மையாகவே எதிர்க்கும் எவருக்கும் மக்களிடம் பேசும் உரிமை மறுக்கப்படுகிறது. இருப்பினும், ட்ரம்பின் நாட்டின் நிலை குறித்த உரை மற்றும் அதற்கு ஜனநாயகக் கட்சியினர் அளித்த பதில் ஆகிய இரண்டிற்கும் எதிராக, தொலைக்காட்சியில் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு சோசலிச சமத்துவக் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்தால், நாங்கள் இதையே கூறியிருப்போம்.
மாடான்சாஸில் உள்ள ஒரு கியூபா தொழிலாளியும் மற்றும் ஒரு தனித்து வாழும் தாயும், ட்ரம்பின் இனப்படுகொலைக்கு இணையான பொருளாதாரத் தடையின் கீழ் 30 மணிநேரம் வரை நீடிக்கும் மின்வெட்டுகள், பசியுடன் உறங்கச் செல்லும் குழந்தைகள் மற்றும் நிலவும் அச்சச் சூழலைப் பற்றி விவரிக்கிறார்.
பெருநிறுவனங்களின் இலாபங்களைப் பாதுகாக்கும் அதே வேளை, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது மேலும் சுமைகளை ஏற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கனக் கொள்கைகளை இலங்கை தொடர்ந்து செயல்படுத்தி வருவதை உறுதி செய்வதற்காகவே கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவின் பயணம் அமைந்திருந்தது.
தங்கள் கிளாட் (Claude) மாதிரியிலுள்ள செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும், இல்லையெனில் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவதோடு பாதுகாப்பு உற்பத்திச் சட்டத்தின் கீழ் கட்டாய நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்திற்கு ட்ரம்ப் நிர்வாகம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளையில், எலோன் மாஸ்க்கின் பாசிசப் போக்குடைய குரோக் AI-ஐ வகைப்படுத்தப்பட்ட இராணுவ வலைப்பின்னல்களில் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்திலும் அது கையெழுத்திட்டுள்ளது.
மத்திய கிழக்கில் பெருமளவிலான படைக் குவிப்பு மற்றும் ஈரானுக்கு எதிரான தீவிரப் போர் முன்னேற்பாடுகளுக்கு மத்தியில், பெய்ரூட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து அத்தியாவசியமற்ற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
2003 ஈராக் படையெடுப்பிற்குப் பின்னர், மத்திய கிழக்கில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான அமெரிக்க இராணுவப் படைகளை ட்ரம்ப் நிர்வாகம் திரட்டி வருகிறது. இது ஈரானுக்கு எதிராக வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் நீடிக்கக்கூடிய மற்றும் ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் விழுங்கக்கூடிய ஒரு பாரிய சட்டவிரோதப் போரின் விளிம்பில் அமெரிக்காவை நிறுத்தியுள்ளது.
பாசிச ஜனாதிபதி, நிதி தன்னலக்குழுவின், நிதி தன்னலக்குழுவால் மற்றும் நிதி தன்னலக்குழுவிற்கான ஒரு அரசாங்கத்திற்கு தலைமை தாங்குகிறார்.
செயற்கை நுண்ணறிவின் (அல்லது இன்னும் சரியாகச் சொன்னால் மேம்படுத்தப்பட்ட நுண்ணறிவு) வளர்ச்சியும், அது ஒரு பெரிய பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளைத் தூண்டும் திறனைக் கொண்டுள்ளது என்ற அதிகரித்து வரும் கவலையும், மார்க்ஸால் அடையாளம் காணப்பட்ட முரண்பாடுகள் மீண்டும் ஒருமுறை வெளிவருகின்றன என்பதைக் காட்டுகின்றன.
இந்தச் சமூக விரோதப் போக்குக் கொண்ட ஒரு நபர், பூமியிலேயே மிகவும் சக்திவாய்ந்த அரசியல் பதவிக்கு உயர்வதற்கான காரணம் என்ன? இத்தகைய முடிவை உருவாக்கிய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் செயல்முறைகள் எவை? மேலும், இதில் எந்த வர்க்க சக்திகள் செயல்படுகின்றன?
மருத்துவர்களின் சம்பளக் கோரிக்கைகள், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தின் கீழ் இலவச சுகாதார சேவையை அழிக்கும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் கொடூரமான திட்டங்களுடன் மோதுவதானது, இலவச சுகாதார சேவையைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கம் பொதுவான போராட்டமொன்றை முன்னெடுக்க வேண்டியதன் அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது.
வேறு எந்த தனிநபரையும் விடவும், ஜெஸ்ஸி ஜாக்சன் சிவில் உரிமை இயக்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் உருவகமாகத் திகழ்ந்தார் — அதாவது, இன ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு பாரிய தொழிலாள வர்க்க இயக்கமாக இருந்த அதை, ஜனநாயகக் கட்சிக்குள் இருக்கும் ஒரு "நலன் சார்ந்த குழுவாகவும்", கறுப்பின மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தின் ஒரு குறுகிய அடுக்கினரின் சமூக முன்னேற்றத்திற்கான ஒரு கருவியாகவும் மாற்றியதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
அமெரிக்காவின் டெட்ராய்ட் பெருநகரப் பகுதி முழுவதும் சுங்க அமலாக்கத் துறை (ICE) முகவர்களின் நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக அதிகரித்து வருகின்றன. இது ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் நாடு தழுவிய அளவில் நடத்தி வரும் கடுமையான ஒடுக்குமுறைத் தாக்குதலின் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது.
தொழிற் கட்சியின் நெருக்கடியானது, தொழிலாள வர்க்கம் இந்தச் சூழலில் சுயாதீனமாக தலையிட வேண்டிய அவசரத் தேவையை நேருக்கு நேர் கொண்டு வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாள வர்க்கம் தனது சொந்தக் கட்சியை உருவாக்குவதன் மூலம் இதைச் செய்ய வேண்டியுள்ளது.
மேக் ட்ரக்ஸ் (Mack Trucks) நிறுவனத் தொழிலாளியான வில் லேமன், ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தை நிர்வாகத்தினதும், அரசினதும் ஒரு கருவியாக மாற்றியுள்ள ஒரு ஒட்டுண்ணி அதிகாரத்துவத்திற்கு எதிராக, சாமானிய தொழிலாளர்களின் கிளர்ச்சியை ஒருங்கிணைக்கப் போட்டியிடுகிறார்.
ஏகாதிபத்திய சக்திகளின் நலன்கள், இராஜதந்திர சூழ்ச்சிகளாலும் சர்வதேச நிறுவனங்களாலும் மறைக்கப்பட்டிருந்த காலம் முடிந்துவிட்டது. இராணுவ வலிமை மற்றும் போரைப் பற்றி அவர்கள் வெளிப்படையான முடிவுகளை எடுக்கும் ஒரு புதிய சகாப்தம் தொடங்கிவிட்டது.
சர்வதேச நாணய நிதியத்தின் வெட்டுக்கள், அவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கக் கொள்கைகள் மற்றும் முதலாளித்துவத்திற்கும் எதிராகப் போராடாமல் இலவச பொது சுகாதார சேவையைப் பாதுகாக்க முடியாது என்று சுகாதார ஊழியர்கள் நடவடிக்கைக் குழு வலியுறுத்துகிறது.
அண்மையில் பொலிஸ் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடானது ஒரு தனிப்பட்ட சம்பவமோ, அல்லது எதேச்சதிகாரமான பொலிஸ் நடவடிக்கைகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டதோ அல்ல. 2009 மே மாத்தில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட, வடக்கு மற்றும் கிழக்கில் 26 ஆண்டு காலம் நீடித்த தமிழர்-விரோத இனவாதப் போரின் போது அபிவிருத்தி செய்யப்பட்ட பொலிஸ்-அரசு வழிமுறைகள், தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் தொடரப்பட்டு, நாடு முழுவதும் பெருகிய முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசுத் தலைவர்கள் பங்கேற்கும் இந்தப் மிகப்பெரிய மாநாட்டில் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் (AOC) கலந்துகொள்வது என்பது, அவரும், அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளும் (DSA) அமெரிக்க ஏகாதிபத்திய கட்டமைப்பிற்குள் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதைக் குறிக்கிறது.
முதலாளித்துவ செய்தி ஊடகங்களின் தொனி மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் எதிர்கொள்ளும் சிக்கலை பைனான்சியல் டைம்ஸ் மிகச்சரியாகத் தொகுத்துக் கூறியுள்ளது: தங்களின் நிகழ்ச்சி நிரல்களைச் செயல்படுத்தத் தவறும் ஒரு பிரதமரை மாற்றுவதற்கு கூட அவர்கள் அச்சப்படுகிறார்கள்.
சுகாதார ஊழியர்களின் சிறந்த வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளுக்கான போராட்டமானது ஏழைகளின் ஆதரவுடன் தொழிலாள வர்க்கத்தின் கசப்பான போராட்டங்கள் மூலம் வென்றெடுக்கப்பட்ட இலவச சுகாதார சேவையை பாதுகாப்பதோடு பிரிக்க முடியாத வகையில் பிணைந்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை, 60-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்கள், சுமார் 100 வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள், மற்றும் ஏராளமான உயர்மட்ட இராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் வெளியுறவு கொள்கை வல்லுநர்கள் 62-வது மூனிக் பாதுகாப்பு மாநாட்டிற்காக ஒன்று கூடுகின்றனர்.
இந்தியத் தொழிலாள வர்க்கம், தெற்காசியாவிலும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களுடன் கைகோர்க்க வேண்டும். இந்தியத் தொழிலாள வர்க்கத்தை சுரண்டும் அதே பெருநிறுவனங்களே உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களையும் சுரண்டுகின்றன. வெளிநாட்டுப் போட்டியாளர்களுக்கு எதிராகப் போருக்குத் தயாராகும் அதே அரசாங்கங்களே தமது சொந்த உழைக்கும் மக்கள் மீதும் போரை முன்னெடுக்கின்றன.
அடிமை முறையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட மெக்சிகன்-அமெரிக்கப் போர், இறுதியில் உள்நாட்டுப் போரில் அந்த அடிமை முறை அழிவதற்கே வழிகோலியது. மேலும், இது ஒரு எல்லையை உருவாக்கியது, அதன் விளைவுகள் இன்றும் அமெரிக்க அரசியலைத் தீர்மானிக்கின்றன.
இந்தியாவின் புதிய தொழிலாளர் சட்டங்கள், ஊதியம், தொழில் பாதுகாப்பு மற்றும் தொழில் நிலைமைகளை நிர்வகிக்கும் சட்டப் பாதுகாப்புகளை அகற்றி, தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம் செய்வதற்கு உள்ள சட்டப்பூர்வ உரிமைகளை பெருமளவில் அபகரிக்கின்றன.
பிராந்தியத்தில் வாரக்கணக்காக போர்க்கப்பல்கள், குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் இராணுவத்தினரை பெருமளவில் நிலைநிறுத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க இராணுவம் தயாராக உள்ளது.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது இத்தாலிய தீவிர வலதுசாரி அரசாங்கம் மேற்கொண்ட நகர முடக்கம் அல்ல. மாறாக, ட்ரம்ப் நிர்வாகம், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) மற்றும் பாசிசத்திற்கு எதிராகப் பெருகி வரும் எதிர்ப்பு அலையே ஆகும்.
மம்தானி மேயராகப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே, அவரைப் பதவிக்குக் கொண்டு வந்த எதிர்ப்பு உணர்வை முழுமையாகக் காட்டிக்கொடுத்தும், நிராகரித்தும் பெரும் சாதனை படைத்துள்ளார்.
முடியாட்சி மற்றும் பிரபுத்துவத்திற்கு எதிரான ரொம் பெய்னின் புரட்சிகரமானத் தாக்குதல், கால் நூற்றாண்டுக்கு முன்பே அமெரிக்க சுதந்திரத்திற்கான பாதையை வகுத்தது—அது இன்றைய காலத்திற்கும் மிக அவசியமான ஒன்றாகத் திகழ்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி, இந்த வாரம் வெளியிட்ட தொடர்ச்சியான கருத்துக்களில், 2020ல் "திருடப்பட்ட தேர்தல்" குறித்த தனது பொய்களை மீண்டும் மீண்டும் கூறியுள்ளார். மேலும், ஜனநாயகக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தேர்தல்களை நடத்துவதை "கையகப்படுத்த" குடியரசுக் கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தொழிலாள வர்க்கத்தின் அணிகளுக்குள் மிக ஆழமாகச் சென்றடையும் ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 1980-களில் திணிக்கப்பட்ட தோல்விளைத் தொடர்ந்து, வர்க்கப் போராட்டம் கடந்த 40 ஆண்டுகளாக அடக்கப்பட்ட பின்னர், அமெரிக்கத் தொழிலாள வர்க்கம் மீண்டும் எழுச்சிபெறத் தொடங்கியுள்ளது.
டிட்வா சூறாவளி, 25 மாவட்டங்களிலும் உள்ள பெருந்தோட்டங்களை பேரழிவிற்குள்ளாக்கியதைத் தொடர்ந்து இலங்கையின் தோட்டத் தொழிலாளர்களுக்கு கண்ணியமான, வாழக்கூடிய வீட்டுவசதிக்கான பல தசாப்த கால கோரிக்கை மீண்டும் அவசரமாக எழுந்துள்ளது.
நிஜமான ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க இராணுவத்தால் குற்றவியல் ரீதியாகக் கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்குள் வாஷிங்டன், சாவிஸ்டா (chavista) அரசாங்கத்தின் உதவியுடன் வெனிசுவேலாவை மறு காலனித்துவப்படுத்தி அதன் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றி வருகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், குறிப்பாக 1947-1948 காலகட்டத்தில் தெற்காசியப் பிராந்தியத்தில் ஏகாதிபத்தியவாதிகளால் உருவாக்கப்பட்ட இணக்கங்களின் பண்பு பற்றி தொலைநோக்குப் பார்வையுடன் எழுதப்பட்ட இந்த அறிக்கை, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதுடன் இப்போது 78 ஆண்டுகாலமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.